தனது நிலைப்பாட்டை மாற்ற முடியாது என்கிறார் சாகர காரியவசம்!

Date:

இந்நாட்டு எரிபொருள் விலை அதிகரிப்பு தீர்மானம் தொடர்பில் தனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (16) கட்சி அலுவலகத்திற்கு வந்த போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.

 

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் தனது கையெழுத்துடன் வௌியிடப்பட்ட கடிதத்தின் நிலைப்பாட்டில் தான் மற்றும் கட்சி தொடர்ந்தும் உள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

 

“இரகசிய கலந்துரையாடல்கள் இல்லை. நாம் அனைத்தையும் வௌிப்படையாக செய்கிறோம். இந்நாட்டு மக்களால் உருவாக்கப்பட்ட கட்சிதான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன. நாம் மக்களுக்காக எடுக்க வேண்டிய அனைத்து தீர்மானங்களையும் எடுப்போம். தைரியமாக அறிவிப்போம். எதிர்காலத்திலும் அப்படிதான். வௌியிடப்பட்ட கடிதத்தின் நிலைப்பாட்டில் இன்றும் நான் இருக்கிறேன். கட்சியும் அப்படிதான்.”

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...