போட்டி சமநிலையில் முடிவடைந்தால் வெற்றியாளரை தீர்மானிக்கும் வழியை ஐசிசியே கண்டறிய வேண்டும் – சுனில் கவஸ்கர்!

Date:

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டி, மழை காரணமாக சமநிலையில் முடிவடைந்தால், வெற்றியாளரை தீர்மானிப்பதற்கான வழியை சர்வதேச கிரிக்கட் பேரவை கண்டறிய வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவஸ்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி சதம்டனில் ஆரம்பமான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டி, சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.

முதலாம் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாம் நாள் ஆட்டமும், போதிய வெளிச்சமின்மை காரணமாக இடையிடையே இடைநிறுத்தப்பட்டது.

போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது, 217 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து, தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி, அன்றைய ஆட்டநேர முடிவின்போது, 2 விக்கட்டுக்களை இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

நான்காம் நாள் ஆட்டமும், மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது.இந்நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டமும், மழை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...