கிராமம் ஒன்றில் கொவிட் கொத்தணி!

Date:

வெலிமட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொரகஸ் ஹுலங்கபொல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் 40 கொவிட் 19 தொற்றாளர்கள் பதிவாகி உள்ளனர்.

கடந்த தினம் பதிவான தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேரும் மற்றும் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 10 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த நோயாளர்கள் அனைவரையும் இடைநிலை சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

ஒரே சந்தர்ப்பத்தில் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ள காரணத்தால் பிரதேசத்தின் அனைத்து விற்பனை நிலையங்களையும் மூட பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள கினிகத்ஹேன கடவல தோட்டத்தில் புதிதாக 24 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதேபோல், அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நேற்று 47 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர்.

80 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் பதிவானதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...