ஐரோப்பிய ஒன்றிய  நாடுகளுக்கு அனுப்பப்படும் தபால் பொருட்களுக்கு இன்று முதல் விசேட வரி

Date:

இலங்கையில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளுக்கு அனுப்பப்படும் தபால் பொருட்களுக்கு விதிக்கப்படும் மறு சீராமைக்கப்பட்ட வரி கொள்கை இன்று (01) முதல் அமுல்படுத்தப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 26 நாடுகளுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் தவிர ஏனைய தபால் பொருட்களுக்கு இன்று முதல் தபால் வரி கொள்கை அமுலாவதாக தபால்மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளமைக்கு அமைய தபால் நுகர்வோர், இணையவழி விற்பனையில் ஈடுப்படுவோர் மற்றும் இணையவழி மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு இந்த புதிய வரிகொள்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி 150 யூரோவுக்கும் குறைந்த பெறுமதியுடைய அனைத்து தபால் பொருட்களையும் குறித்த நாடுகளுக்கு அனுப்புவோரிடம் இருந்து நேரடி வரி அறவிடப்படும் என தபால்மா அதிபர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

அதேபோல் 150 யூரோவுக்கும் அதிக பெறுமதியுடைய பொருட்களை அனுப்பினால் நாட்டில் கடைப்பிடிக்கப்படும் வரி கொள்கைக்கு மேலதிகமாக ஏனைய சுங்கக் கொள்கைகளுக்கு உட்பட்டதாக வரி அறவிடப்படும் எனவும் அந்த வரி பணம் பொருட்களை பெறுவோரிடம் இருந்து அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், வெட் மற்றும் நடவடிக்கை கட்டணங்கள் செலுத்தப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட நாட்டின் தபால் நிர்வாகம் அல்லது சுங்கத்தால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் நுகர்வோர் பொறுப்பேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மேற்குறித்த வரி மற்றும் ஏனைய வரிகளுக்கு இலங்கை தபால் திணைக்களம் பொறுப்பேற்காது என தபால்மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...