யானைப் பசியுடன் காத்திருந்த மக்களுக்கு சோளப்பொரியையாவது வழங்காத நிலைப்பாட்டில் ஜனாதிபதியின் உரை அமைந்தது – இம்ரான் மஹ்ரூப் காட்டம்

Date:

பல வாரங்களாக முடக்கம், எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளால் இன்று மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி இருக்கின்றனர். அவற்றை ஜனாதிபதி உரையில் உள்வாங்குவார் என்று மக்கள் எதிர்பார்த்த போதும் அது நிறைவேறவில்லை. அவரது உரையில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கவில்லை. எனவே யானைப் பசியுடன் காத்திருந்த மக்களுக்கு ஒரு சோளப்பொறியேனும் தராத ஒரு நிலைப்பாடாகவே ஜனாதிபதியின் உரை காணப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

நேற்று(30) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Xpress Perl கப்பல் தீப்பிடித்ததை தொடர்ந்து நூற்றுக்கணக்கான கடலாமைகள் இறந்துள்ளன. எத்தனையோ டொல்பின்கள், திமிங்கிலங்கள், மீன் இனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் தொழில்களை இழந்துள்ளனர். எனினும் அரசாங்கம் மௌனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...