தேசிய முகவர் நிறுவனத்தின் உதவி முகாமையாளருக்கு பிணை!

Date:

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீவிபத்துக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த கப்பலின் தேசிய முகவர் நிறுவனத்தின் உதவி முகாமையாளர் சஞ்சீவ லங்காபிரிய சமரநாயக்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியதை அடுத்து கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிமதி தமித் தொட்டவத்த முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

 

அதனடிப்படையில் சந்தேக நபரை 2 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீர பிணைகள் இரண்டின் அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

 

சந்தேக நபர்கள் வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவருடைய கடவுச்சீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...