மணமகன் மற்றும் மணப்பெண்ணுக்கு விசேட அனுமதி அறிவிப்பு- பொலிஸ் ஊடகப்பிரிவு !

Date:

திருமண பந்தத்தில் இணையவுள்ள மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோருக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்காக விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு மாகாணங்களில் வசிக்கும் மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோருக்கு பயணக் கட்டுப்பாடுகளின் போது, ஏற்பட்ட சிக்கல்களை கருத்திற்கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோரின் பெற்றோர்களுக்கும் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரிடம் தெளிவுபடுத்துமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....