திருகோணமலை நீதிமன்ற நீதிபதிகள்,சட்டத்தரணிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கவும் -இம்ரான் எம்.பி வேண்டுகோள்!

Date:

திருகோணமலை நீதிமன்ற நீதிபதிகள்,சட்டத்தரணிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குமாரு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் கோரிக்கை விடுத்துள்ளார்

இது தொடர்பாக அவர் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கையை ம்முன்வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

தற்பொழுது நாடுமுழுக்க வேகமாக பரவிவரும் கொவிட் – 19 ஆனது எமது திருகோணமலை மாவட்டத்திலும் வேகமாக பரவி வருவதனை அறிவீர்கள். அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது, அதில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுவது மிகமுக்கியமாதொன்றாக காணப்படுகின்றது. இத்தடுப்பூசியானது தெரிவு செய்யப்பட்ட பிரிவினருக்கு முன்னுரிமையடிப்படையில் ஏற்றப்படுகின்றது அதில் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்ட திணைக்கள ஊழியர்கள், பொதுமக்களுடன் நெருக்கமாக உறவை பேணும் அலுவலகங்கள் என்பனவும் உள்ளடங்கும். நீதிமன்றங்களும் அவ்வாறான பொதுமக்களுடன் நெருக்கமான உறவை பேணும் பிரிவு என்பதனை நாம் அறிவோம்,

 

இக்கொரோனா நெருக்கடியான காலப்பகுதியிலும் திருகோணமலை நீதிமன்ற கட்டிட தொகுதியில் அமைந்துள்ள நீதிமன்றங்கள் இயங்குவதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது. நீதிமன்றங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் சென்றுவருகின்றனர் அதில் பல்வேறு வகையான நபர்கள் உள்ளடங்குகின்றனர் முக்கியமாக போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள், திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்கள். இவ்வாறானவர்களுடன் தொடர்புபடுவதினால் அங்கு கடமையாற்றும் நீதிபதிகள், சட்டத்தரணிகள், ஊழியர்கள் உள்ளடங்கிய சுமார் 150 பேர் கொரோனா அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதாகவும் அதனால் தமக்கும் கொரோனா தடுப்பூசியினை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணிகள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இவ்வாறான இக்கட்டான நிலையில் நீதிமன்றங்களில் கடமையாற்றுபவர்களின் பாதுகாப்பு கருத்திற்கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் அவர்களின் நியாயமான கோரிக்கையினை ஏற்று அங்கு கடமையாற்றும் 150 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசியினை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...