37 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் மூவர் கைது!

Date:

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் 37 மில்லியன் ரூபா பெறுமதியான 103.75 கிலோகிராம் கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

வடக்கு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கேரள கஞ்சாவை கடத்த முற்பட்ட வேளையில் கடற்படையின் வடக்கு கட்டளையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

 

சர்வதேச கடல் எல்லைக் கோட்டு பகுதியில் இருந்து நாட்டிற்குள் கடத்த நினைத்து கடத்தல் காரர்கள் படகிற்குள் கஞ்சாவை வைத்திருக்கலாம் என கடற்படை சந்தேகிக்கிறது.

 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி மற்றும் பருத்தித்துறை பிரதேசங்களில் வசிக்கும் 20 தொடக்கம் 40 வயதுடையவர்கள் என கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை கொவிட்- 19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்றதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...