கண்காணிப்பை பலப்படுத்த ஜோ பைடன் பணிப்பு!

Date:

கொரோனா குறித்த வதந்திகளை கண்காணிக்க தவறுவதன் மூலம் சமூக வலைத்தளங்கள் மக்களை கொல்கின்றன என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.

தடுப்பூசிகள் மற்றும் தொற்றுநோய் குறித்து பொய்யைப் பரப்புவதில் பேஸ்புக் போன்ற தளங்களின் பங்கு குறித்து வெள்ளை மாளிகையில்நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

எங்களிடம் உள்ள ஒரே தொற்றுநோய், கண்டறியப்படாதவர்களிடையே உள்ளது என்வும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சர்ஜன் ஜெனரல் விவேக் மூர்த்தி தடுப்பூசிகளைப் பற்றிய தவறான தகவலை பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் என்று அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு பைடனின் கருத்துக்கள் வந்துள்ளன.

வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் சாகி, பேஸ்புக் மற்றும் பிற தளங்கள் தடுப்பூசிகளைப் பற்றிய தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்க அதிகாரிகள், தடுப்பூசிகள் காரணமாக வைரஸிலிருந்து இறப்புகள் மற்றும் கடுமையான நோய்கள் முற்றிலும் தடுக்கக்கூடியவை என்று அறிவுறுத்தினர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...