மூன்று வேளையும் உணவுக்கே மக்கள் கஷ்டப்படுகின்றார்கள்-விழித்துக் கொண்ட பஷில்!

Date:

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையினை குறைப்பது எமது முதற்கட்ட செயற்பாடாக அமையும் எனத் தெரிவித்த நிதியமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ, இதற்கு அனைத்து தரப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

நிதியமைச்சருக்கும், உள்ளூராட்சிமன்ற பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் இடம் பெற்றது.இதன் போது கருத்துரைக்கையில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

மூன்று வேளையும் உணவு பெற்றுக் கொள்ள வசதியில்லாத மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பல்வேறு எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்கள் ஆட்சியதிகாரத்தை கையளித்துள்ளார்கள். ஆகவே அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையினை குறைப்பதற்கு அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...