இலங்கையில் டெல்டா திரிபு குறித்து அறிக்கையிடப்படும்போது பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது பொருத்தமில்லை  | பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம்

Date:

இலங்கையில் பல்வேறு பகுதிகளிலிருந்து டெல்டா கொவிட் திரிபுகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது பொருத்தமானதல்லவென பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், டெல்டா வகையானது எதிர்காலத்தில் நாட்டில் பரவக்கூடிய பிரதான கொவிட் வகையாக மாறும் என அதன் தலைவர் உபுல் ரோஹண சுட்டிக்காட்டுகிறார். தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்திய பல நாடுகளும் டெல்டா கொவிட் திரிபு பரவுவதால் பயணக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக உபுல் ரோஹன கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,
“எவ்வாறாயினும் அடுத்த சில நாட்களில், கொவிட் -19 டெல்டா வகை இலங்கையின் முன்னணி தொற்றுநோய்களில் ஒன்றாக மாறும். டெல்டா வகை முதன்மையான இனமாக மாறினால், இலங்கை முன்னெப்போதையும் விட ஆபத்தான ஒரு தொற்று நோயை எதிர்கொள்ளும். இந்தச் சூழ்நிலையை அரசாங்கமும் மக்களும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். எதிர்காலத்தில் நாட்டில் ஒரு பேரழிவு சூழ்நிலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அது மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.” என்றார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...