82வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், 1939 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய காங்கிரஸ் ஆக ஆரம்பிக்கப்பட்டு 1954ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆக பரிணாமம் பெற்று இன்றுடன் 82வது அகவையை எட்டிப்பிடித்துள்ளது.
ஸ்தாபனம் நீண்ட பயணம் எதிர்கொண்ட காலங்கள் ஏராளம் உழம் கொண்ட போராட்ட களங்கள் எத்தனை எத்தனை, பெருந்தோட்ட மக்களுக்கு இ.தொ.கா சமூக அரசியல் அந்தஸ்தை பெற்றுத் தந்ததோடு என்றும் அவர்களின் உரிமைகளுக்காக ஓங்கி ஒலித்தது.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் அமரர் ஆறுமுகம் தொண்டமான் உள்ளிட்ட இ.தொ.காவின் சகல தரப்பினரது அயராத உழைப்பே, இன்று தலைநிமிர வைத்துள்ளது. இதன் அடையாளமே இ.தொ.காவின் அபார வளர்ச்சி.