நாட்டில் இதுவரை 1 கோடியே 21 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது

Date:

இதுவரையில் இலங்கைக்கு 1 கோடியே 21 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அவற்றுள் நூற்றுக்கு 72 சதவீதமானவை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டவை என தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் 80 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளும், 5 இலட்சம் எக்ஸ்டரா செனகா தடுப்பூசிகளும், 180,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகளும் மற்றும் 115,830 பைஸர் தடுப்பூசிகளையும் அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்காக இலங்கை ரூபாவில் 1,546 கோடி செலவழித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சீனாவிடம் இருந்து 16 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் அன்பளிப்பாக கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...