விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – உரம் இறக்குமதிக்கான தடை நீக்கம்!

Date:

நாட்டில் இரசாயன உரம் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த தடை நீக்கம் குறித்த அறிவிப்பு அடங்கிய கடிதத்தை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கையொப்பமிட்டு வங்கிகளின் பிரதானிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இரசாயன உரம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை எக்காரணத்தைக் கொண்டும் மீளப்பெறப்படாது என பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அறிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்த சேதனப் பசளை திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் கூறியிருந்தார். எனினும் திடீரென இரசாயன உரம் இறக்குமதி தடை விதிக்கப்பட்டதால் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினர்.

விவசாயிகளின் பயிர்கள் அழிவடையும் நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இருந்தபோதும் இரசாயன உரம் இறக்குமதிக்கான தடை மீளப்பெறப்படாது என உறுதியாகக் கூறிய அரசாங்கம் தற்போது தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறி இராசாயன உரம் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அளித்துள்ளது.

அதன்படி ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் இரசாயன உரம் இறக்குமதி செய்யக் கூடிய அளவிலான ஏற்பாடுகளை நிதி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...