புகழ்பெற்ற கால்பந்து வீரரான லயனல் மெஸ்ஸி பார்ஸிலோனா கால்பந்து கழகத்தில் இருந்து விலகினார்

Date:

புகழ்பெற்ற கால்பந்து வீரரான லயனல் மெஸ்ஸி இனி பார்ஸிலனா கால்பந்து கழகத்திற்காக விளையாடமாட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பார்ஸிலோனா அணியின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜெண்டினாவை சேர்ந்த கால்பந்து வீரரான லயனல் மெஸ்ஸிக்கும், FC பார்ஸிலோனா கால்பந்து கழகத்துக்கு இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது.

எனினும்,நேற்று இரு தரப்பினரும் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட இருந்த நிலையில், அது இடைநிறுத்தப்பட்டுள்ளது. நிதி மற்றும் கட்டமைப்பு தடைகள் (ஸ்பானிஷ் லிகா விதிமுறைகள்) காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பார்ஸிலோனா கால்பந்து கழகம் குறிப்பிட்டுள்ளது. லயனல் மெஸ்ஸி இனிமேல் எந்த அணியிலும் இல்லை எனவும், பார்ஸிலோனா கால்பந்து கழகத்துடனான ஒப்பந்தம் காலாவதியானதால் இனி அவர் தனி வீரரானார் எனவும் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...