பாடசாலைகள் திறக்கப்படுமா? | அமைச்சர் G.L.பீரிஸ்

Date:

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை, பாடசாலைகளை திறக்க முடியாது என கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார் .

மேலும், நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் அசாதாரய சூழ்நிலை காரணமாக, முன்னர் திட்டமிட்டவாறு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் பாடசாலைகளை திறக்க முடியாது என அவர் கூறியுள்ளார். கல்விசார் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த போதிலும், மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் சுகாதார தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும், சுகாதார தரப்பு அனுமதி வழங்கியவுடன் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என G.L.பீரிஸ் தெரிவிக்கின்றார்.

Popular

More like this
Related

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...