கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியர் பத்மசாந்த உயிரிழப்பு!

Date:

கலிகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிரதான வைத்தியராக செயற்பட்ட வைத்தியர் பத்ம சாந்த கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

 

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவர் பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இரண்டு பிள்ளைகளின் தந்தையான பத்மசாந்த கொவிட் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வைத்தியராவார்.

 

சுகாதார வழிமுறைகளுக்கு அமைய அன்னாரின் இறுதிக் கிரியைகள் கண்டி, மஹாய்யாவ மயானத்தில் இன்று (10)இடம்பெற்றுள்ளது.

 

இதேவேளை, கேகாலை பொது வைத்தியசாலையின் கர்ப்பிணி வார்டில் தாதியர் ஒருவர் உட்பட 4 ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...