குளிரூட்டப்பட்ட அறைகளில் பணி புரிவோர் இரு முகக்கவசங்களை அணியுமாறு வேண்டுகோள்- மருத்துவ நிபுணர் நதீகா ஜானகே

Date:

குளிரூட்டப்பட்ட அறைகளில் பணியாற்றுவோர் முடிந்தவரை இரண்டு முகக் கவசங்களை அணியவும் என்றும் இரண்டு மீற்றர் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

முகக்கவசம் அணியும் போது சரியான முறையில் தரமான முகக்கவசத்தை அணிய வேண்டும் என்றும் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்களுக்கான நிபுணர் வைத்தியர் நதீகா ஜானகே தெரிவித்துள்ளார்.
அடியிலுள்ள முகக்கவசம் இறுக்கமாக இருப் பதற்காக முகக் கவசத்துக்கு மேலாக மற்றொரு முகக் கவசத்தை அணிய வேண்டும் என்றும் பொதுச் சுகாதார அதிகாரிகள் ஒரு மீற்றர் இடை வெளியைப் பின்பற்றுமாறும் அறி வித்துள்ளனர் என்றும் முடிந்தவரை இரண்டு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணுவது மிகவும் சிறந்ததாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்டா கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் சுகாதார வழிகாட்டிகளைப் பின்பற்ற வேண்டும் என சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார்: ஈரான் தூதுவர்!

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான்...

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...