மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் | கவலைக்கிடமான நிலையில் இளைஞன்

Date:

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக பொலிஸாரின் சமிக்கையை மீறி மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரடியனாறு பங்குடாவெளிச்சந்தியில் இன்று அதிகாலை 3 மணியளவில் சட்டவிரோத மணல் அகழ்ந்து உழவுஇயந்திரத்தில் எடுத்துச் சென்ற போது பொலிஸார் குறித்த உழவு இயந்திரத்தை நிறுத்த முயற்சித்த போதும் உழவு இயந்திரம் பொலிஸாரின் சமிக்கையை மீறி சென்ற நிலையில் பொலிஸார் அதனை துரத்திச் சென்று உழவு இயந்திரம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய எஸ்.துசாந்தன் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...