களனி பாலத்தின் கட்டுமான பணி காரணமாக அதனூடாக கொழும்பிற்கு பயணிக்கும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.பேஸ்லைன் வீதியின் களனி திஸ்ஸ சுற்றுவட்டத்தில் இருந்து ஒருகொடவத்த சந்தி வரையான கொழும்பிற்குள் நுழையும் வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது.
இன்று (14) அதிகாலை 5 மணி முதல் திங்கட் கிழமை (16) அதிகாலை 5 மணி வரையில் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.