ஆப்கானிஸ்தானில் இருக்கும் இலங்கையர்களின் நிலைமை

Date:

ஆப்கானிஸ்தான் – காபூலில் உள்ள 8 இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேறி கட்டார் மற்றும் இங்கிலாந்துக்கு சென்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, 3 இலங்கையர்கள் இங்கிலாந்துக்கும், 5 பேர் கட்டார் நாட்டிற்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

மேலும் 60 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும், அவர்களையும் மற்ற நாட்டவர்களுடன் வெளியேற்றுமாறு இங்கிலாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும், ஆப்கானிஸ்தானின் காபூலில் இருக்கும் இலங்கையர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என வெளியுறவு செயலாளர் கூறினார்.

Popular

More like this
Related

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக...

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...