ஆப்கானிஸ்தானில் உள்ள அகதிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் | மலாலா கவலை

Date:

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் தங்களின் பிடிக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில், “ஆப்கானிஸ்தானில் பெண்கள் நிலை குறித்து ஆழமாக கவலையுறுகிறேன்” என மலாலா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றி இருப்பது முழுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அங்குள்ள பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மக்கள் உரிமை குறித்து ஆழமாக கவலையுறுகிறேன். அங்கு உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உலகளாவிய, பிராந்திய மற்றும் உள்ளூர் சக்திகள் குரல் கொடுக்க வேண்டும்.
அவசர மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும், அங்குள்ள அகதிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...