ஜனாதிபதி – ரணில் விக்கிரமசிங்க இன்று அவசர சந்திப்பு

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று ​நிலைமைகள் தொடர்பில் இருவரும் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உப-தலைவர் அகில விராஜ் காரியவசத்தின் தந்தையின் இறுதி கிரியையில் பங்கேற்பதற்காக, ரணில் விக்கிரமசிங்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ரணில், கொழும்புக்குத் திரும்பியவுடன் இந்த சந்திப்பு , இன்று (17) இடம்பெறும் என ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இந்தியா அறிவிப்பு.

இலங்கையில் டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகள் கள விஜயம்

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா...

கொழும்பு மாநகர சபையில் ஆளும் தேசிய மக்கள் கட்சி வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தோல்வி!

ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) கொழும்பு மாநகர சபையின் வரவு-செலவுத்...