ஜனாதிபதி – ரணில் விக்கிரமசிங்க இன்று அவசர சந்திப்பு

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று ​நிலைமைகள் தொடர்பில் இருவரும் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உப-தலைவர் அகில விராஜ் காரியவசத்தின் தந்தையின் இறுதி கிரியையில் பங்கேற்பதற்காக, ரணில் விக்கிரமசிங்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ரணில், கொழும்புக்குத் திரும்பியவுடன் இந்த சந்திப்பு , இன்று (17) இடம்பெறும் என ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...