ஜனாதிபதி – ரணில் விக்கிரமசிங்க இன்று அவசர சந்திப்பு

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று ​நிலைமைகள் தொடர்பில் இருவரும் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உப-தலைவர் அகில விராஜ் காரியவசத்தின் தந்தையின் இறுதி கிரியையில் பங்கேற்பதற்காக, ரணில் விக்கிரமசிங்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ரணில், கொழும்புக்குத் திரும்பியவுடன் இந்த சந்திப்பு , இன்று (17) இடம்பெறும் என ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...