நாடாளுமன்ற பணிக்குழாமில் 12 பேருக்கு கொவிட்!

Date:

நாடாளுமன்ற பணிக்குழாமைச் சேர்ந்த 275 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட எழுமாறு கொவிட் பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதையடுத்து இன்று (17) முற்பகல் 9 மணிமுதல் 12 மணிவரையான காலப்பகுதியில் நாடாளுமன்ற வளாகத்தில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்தநிலையில், நாடாளுமன்றில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி காணொளிகளை கொண்டு தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பை பேணியவர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.அத்துடன், நாளைய தினம் முதல் மறு அறிவித்தல் வரை குறைந்தளவான பணிக்குழாமினரை கொண்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...