நாளை சில பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்!

Date:

வத்தளை, மாபோல, ஹூனுபிடிய உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை (18) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர் விநியோக அமைப்பின் மேம்படுத்தல் பணிகள் காரணமாக நாளை முற்பகல் 10.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி, வத்தளை, ஹெந்தலை, எலகந்த, அல்விஸ் நகர், வெலிகடமுல்ல, கெரவலபிடிய, மாபோல, ஹுனுபிடிய, வெடிகந்த, வேவெல்துவ, பிரசங்கவத்த, கிரிபத்கொட புதிய வீதி, பாதிலிய முனை வீதி, தலுபிடிய வீதி மற்றும் அக்பார் வீதி ஆகிய பிரதேசங்களுக்கு குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...