நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடா? | எரிசக்தி அமைச்சர்

Date:

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என சமூகவளைதலங்களில் பரவிவரும் செய்தி தொடர்பில் எரிசக்தி அமைச்சர் ட்விட்டர் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில் நாட்டில் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும், ஏதாவதொருவ வகையில் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுமாயின் தான் அதுதொடர்பில் பொதுமக்களுக்கு அறியத்தருவதாக அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக எரிபொருள் விலை அதிகாித்த சந்தர்ப்பங்களில் தான் அதுதொடர்பில் மக்களுக்கு நேரடியாக அறிவித்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதாகவும், கையிருப்பிலுள்ள டீசல் 11 நாட்களுககும், பெற்றோல் 10 நாட்களுக்கும் மாத்திரமே போதுமானது என இலங்கை பெற்றோலிய பொது சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த நேற்று கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்தே மேற்கண்டவாறு அமைச்சர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...