உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி கறுப்புக்கொடி போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு

Date:

கத்தோலிக்க தேவாலயங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கறுப்புக்கொடி போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
2019 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து அரசாங்கத்தின் தொடர்ச்சியான செயலற்ற தன்மைக்கு எதிராக நாளை(21) இப்போராட்டம் நடைபெறவுள்ளது.
கொழும்பில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஹேஷன் ஜயவர்தன அனைத்துப் பிரஜைகளும் கத்தோலிக்க தேவாலயங்களில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
முன்னதாக கடந்த ஓகஸ்ட் 13ஆம் திகதி கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்தின் தொடர்ச்சியான செயலற்ற தன்மைக்கு எதிராக நாளை கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த முன்வருமாறு கத்தோலிக்க சமூகத்தினருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

Popular

More like this
Related

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக...