கொவிட்டுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட முதல் மரபணு தடுப்பூசி ‘சைகோவ் – டி” இந்தியாவில் அறிமுகம்!

Date:

‘சைடஸ் கெடிலா’ நிறுவனம் தயாரித்துள்ள, ‘சைகோவ் – டி’ தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று(20) அங்கீகாரம் அளித்துள்ளது.

12 வயதுக்கு மேற்பட்டோருக்காக, சைகோவ்-டி என்ற தடுப்பூசியை, குஜராத்தின் அஹமதாபாத்தை சேர்ந்த சைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்துள்ளது. மூன்று, ‘டோஸ்’களாக செலுத்தப்படவேண்டிய இந்த தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகளை, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம், சைடஸ் கெடிலா நிறுவனம் சமர்ப்பித்தது.அதை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தது.

இந்நிலையில், அதன் கோரிக்கையை ஏற்று, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, சைகோவ்-டி தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு நேற்று ஒப்புதல் அளித்தது. உலகிலேயே, கொரோனா வைரசுக்கு எதிராக தயாரிக்கப்பட்டு உள்ள முதல் மரபணு தடுப்பூசி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...