அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தீடீர் உயர்வு!

Date:

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, ஒரு கிலோ மைசூர் பருப்பு 250 ரூபாவுக்கும், ஒரு கிலோ சீனி 215 ரூபாவுக்கும், ஒரு கிலோ இலங்கை உருளைக்கிழங்கு 300 ரூபாவுக்கும், இந்திய உருளைக்கிழங்கு 240 ரூபாவுக்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 135 ரூபாவுக்கும், சிறிய வெங்காயம் 400 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக அறியமுடிகிறது.

மொத்த வியாபாரிகள் இவற்றிற்கான விலையை அதிகரித்துள்ளதன் காரணமாக, சீனி, கிழங்கு, வெங்காயம் மற்றும் நெத்திலி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சதொசவில் 115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனி நேற்று (25) 120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதோடு, மைசூர் பருப்பு கிலோவொன்றின் விலை 250 ரூபா வரை அதிகரித்திருந்தது.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் சதொசவுக்கு ஒரு தொகை வெள்ளை சீனி கிடைக்கவுள்ளதாகவும், இவ்வாறு கிடைத்த பின்னர் தற்போதைய விலையை விடவும் குறைந்த விலையில் மக்களுக்கு சீனியை பெற்றுக்கொள்ள முடியுமென சதொச தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அத்மிரால் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...