புதிய உலக சாதனை படைத்தார் போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ

Date:

சர்வதேச கால்பந்து போட்டிகளில், அதிக கோல்களைப் பெற்றவர் என்ற உலக சாதனையை போர்த்துக்கல் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனதாக்கியுள்ளார்.அயர்லாந்து அணியுடன் நேற்று இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகான் போட்டியில், 2 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் போர்த்துக்கல் அணி வெற்றிபெற்றது.

36 வயதான ரொனால்டோ, இந்தப் போட்டியில் இரண்டு கோல்களை தலையால் அடித்து, தமது 110 மற்றும் 111 ஆவது கோல்களைப் பதிவுசெய்தார்.ஈரானின் முன்னாள் வீரரான அலி டையி, 1993 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டுவரையில், 109 கோல்களைப் பெற்று, ஆடவர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களைப் பெற்றவர் என்ற சாதனை நிகழ்த்தியிருந்தார்.

இந்த சாதனையை 2020 யூரோ கிண்ணப் போட்டியில், ரொனால்டோ சமன் செய்திருந்தார். இந்த நிலையில், மேலும் இரண்டு கோல்களை பதிவு செய்ததன் மூலம், அந்த சாதனையை முறியடித்து, ஆடவர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களைப் பெற்றவர் என்ற புதிய உலக சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ நிகழ்த்தியுள்ளார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...