உருமாறிய புதிய வகை கொரொனா வைரஸ் | உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Date:

கொரோனா வைரஸின் உருமாற்றம் பெற்ற ‘மியு’ கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதற்கு ஒரே தீர்வாக தடுப்பூசி கருதப்படுகிறது.
இதற்கிடையில் உலகின் பல்வேறு இடங்களில் உருமாறிய டெல்டா வகை கொரோனா கண்டறியப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தற்போது மியு (MU) B.1.621 என்று உருமாற்றம் பெற்றுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இந்த உருமாற்றம் பெற்ற மியு வகை கொரோனா வைரஸ் கொலம்பியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டதாகவும் தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் இந்த உருமாற்றம் பெற்ற கொரோனா கண்டறியப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அதிக ஆபத்தான இந்த மியு வகை கொரோனா வைரஸ் குறித்து கண்காணித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...