முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களாக செயற்படுவதை விட பசில் காங்கிரஸ் உறுப்பினர்களாகவே செயற்படுகின்றனர்-நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் காட்டம்! 

Date:

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்பதை விட பசில் காங்கிரஸ் உறுப்பினர்களாகவே முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்களை காண்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார் இன்று (07) நடைபெற்ற நிதி சட்டமூல வாக்கெடுப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ,

இன்று ஒரு கிலோ சீனியை பெற சதோச முன்னால் நூற்றுக்கணக்கான மக்கள் பல மணிநேரம் வரிசையில் நிற்கின்றனர்.நூறு ரூபாவை சேமிக்கவே இவ்வாறு கொரோனா தொற்றையும் கவனிக்காமல் வரிசையில் நிற்கின்றனர்.இதுவே இந்நாட்டு மக்களின் தற்போதைய பொருளாதார நிலை.

ஆனால் மறுபக்கம் போதை பொருள் வியாபாரிகள், பாதாள குழு உறுப்பினர்கள், மோசடி செய்யும் வர்தகர்கள் மறைத்து வைத்திருக்கும் கருப்பு பணங்களை வெள்ளையாக மாற்ற வழிவகுக்க இன்று அரசாங்கம் சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளது.

நூறு ரூபாயை சேமிக்க வரிசையில் நிற்கும் அப்பாவி பொதுமக்கள் ஒருபுறம். நூறு கோடி கோடி ரூபாயை பதுக்கிய கொள்ளையர்கள் ஒரு புறம்.இதுதான் இன்று நாட்டில் உள்ள சமூக நீதி.இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் சமூக நீதி மீறப்பட்டுள்ளது.

இருபதாம் திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் நடைபெற்ற எந்தவொரு வாக்களிப்பிலும் கலந்துகொள்ளாத முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.அவர்களின் தலைவர் எதிராக வாக்களித்துள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இச்சட்டமூலத்தை சமர்ப்பித்தால் அவரை எதிர்க்க முடியாமல் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.ஆகவே இவர்கள் இப்பொழுது பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீமின் கட்டுபாட்டில் இல்லை முழுமையாக பசில் ராஜபக்சவின் கட்டுபாட்டிலயே உள்ளது தெளிவாக புலனாகிறது.இதனால் இவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்பதை விட பசில் காங்கிரஸ் உறுப்பினர்களாகவே செயற்படுகின்றனர் என தெரிவித்தார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...