2, 000 ரூபா கொடுப்பனவை பெற தகுதியானவர்கள் மேல் முறையீடு செய்ய சந்தர்ப்பம்!

Date:

அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் வருமானத்தை இழந்தவர்களுக்காக, அரசாங்கத்தினால் வழங்கப்படும்  இரண்டாயிரம் ரூபாய் மானியக் கொடுப்பனவு பட்டியலில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள், அதனை பெறுவதற்காக மேன்முறையீடு செய்ய முடியும்.

மேன்முறையீடுசெய்வதற்கான விண்ணப்பப்படிவத்தை உரிய முறையில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் ஒப்படைக்கலாமென அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

இந்த கொடுப்பனவுக்காக அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 46 ஆயிரத்தி 581 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறைந்த வருமானமுடைய வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள், சமுர்த்தி பெறுவதற்கு காத்திருப்பு பட்டியலில் உள்ளோர் மற்றும் நாளாந்த வருமானத்தை இழந்த குடும்பங்கள் ,சமுர்த்தி நிவாரணம் பெறாத ஆனால் சமுர்த்தி நிவாரணம் பெறத்தகுதியான குடும்பங்கள் ஆகியோர் இந்த கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...