பிளாஸ்டிக் சார்ந்த மேலும் 7 உற்பத்திகளின் தடை ‌தொடர்பில் விரைவில் வர்த்தமானி!

Date:

பிளாஸ்டிக் சார்ந்த மேலும் 7 உற்பத்திகளுக்கு தடை விதிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர் சட்டமா அதிபரின் பரிந்துரைகள் கிடைத்தவுடன் இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் சார்ந்த 5 உற்பத்திகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.அத்துடன், ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் பொலித்தீன் மூலம் தயாரிக்கப்படும் லன்சீட்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பிளாஸ்டிக்கினால் உற்பத்தி செய்யப்படும் குளிர்பான குவளைகள், இடியப்ப தட்டு, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படும் மலர் மாலைகள் உள்ளிட்ட 7 வித பொருட்கள் அவற்றில் உள்ளடங்குவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...