ஈராக்கில் எர்பில் விமான நிலையத்திற்கு அருகில் ஆளில்லா விமான தாக்குதல்!

Date:

ஈராக்கின் வடக்கு பகுதியிலுள்ள எர்பில் (Erbil) சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குர்திஸ் கிளர்ச்சியாளர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பகுதியில் ஏவுகனை தாக்குதல் நடத்தப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்ட போதிலும் அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் விடுத்த இரண்டாவது அறிக்கையில் ஆளில்லா விமான தாக்குதலே நடத்தப்பட்டாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. குறித்த பகுதியில் ஆறு வெடிப்பு சம்பவங்கள் பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும் எர்பில் விமான நிலையத்திற்கு சேதம் எவையும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...