கரிம உர இறக்குமதிக்கு அனுமதி!

Date:

இதுவரை நெல் சாகுபடிக்கு மாத்திரம் கரிம உரம் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (16) முதல், தேயிலை, தென்னை, இறப்பர் மற்றும் பிற பயிர்களுக்கு கரிம உரங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு அரச உர நிறுவனங்களுக்கு குறித்த உரங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.இதற்கிடையில், ஒக்டோபர் மாதத்திற்குள் அனைத்துப் பயிர்களுக்கான உரத்தையும் தட்டுப்பாடின்றி சந்தையில் இருந்து பெற்றுக் கொள்வதற்காக தனியார் துறைக்கு உரம் இறக்குமதி செய்ய ​அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக நெல் சாகுபடிக்கு தேவையான கரிம உரங்கள் உள்நாட்டிளேயே தயாரிக்கப்பட்டு வருவதாகவும் போதிய அளவு கரிம நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் கூறினார்.

விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 300 கிலோ நைட்ரஜன் மற்றும் 45 கிலோ பொட்டாசியம் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...