விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டம்!

Date:

12 முதல் 19 வயதுக்குட்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கும், தீராத நோய்களுடன் இருக்கும் சிறுவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

ரிஜ்வே சிறுவர் வைத்திய சாலையில் அவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்படும்.இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் நேற்று (21) மேலும் தெரிவிக்கையில், நாள்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள 12 வயதிற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஆரம்பிக்கபடும் என்றும் கூறினார்.ஏனைய சிறுவர்களுக்கும் இந்த தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...