புத்தக விற்பனையகங்களை மீள திறப்பது தொடர்பில் அவதானம்!

Date:

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், சுகாதார நடைமுறைகளுக்கு அமைய, புத்தக விற்பனையகங்களை மீள திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குமாறு காவல்துறை மா அதிபர் சீ.டி விக்ரமரட்ன, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் சமந்த இந்திவர சமரசிங்க காவல்துறைமா அதிபரிக்கு எழுத்து மூல கோரிக்கையினை விடுத்திருந்தார்.ஒரு வருடத்திற்கு மேலாக புத்தக விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியில் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அத்துடன், அத்தியாவசிய புத்தகங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காரணிகளை கருத்திற்கொண்டு புத்தக விற்பனையகங்களை மீள திறப்பதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திடம் காவல்துறைமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...