சீமெந்து, பால் மா, எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை தொடர்பான இறுதித் தீர்மானம் திங்கட் கிழமை!

Date:

சீமெந்து, பால் மா, எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

சந்தையில் குறித்த பொருட்களின் பற்றாக்குறை இன்னும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.சந்தையில் பால் மா பற்றாக்குறை கடந்த ஜூலை மாதம் உருவாக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் பால் மா இறக்குமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.

ஆனால் சந்தையில் பால் மாவுக்கு இன்னும் தட்டுப்பாடு இருப்பதாக நுகர்வோர் முறைப்பாடு தெரிவித்து வருகின்றனர்.நுகேகொட ஜூபிலி தூண் பகுதியில் இன்று பால் மா வாங்குவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் இருந்ததாகவும், வாடிக்கையாளர்களுக்கும் கடையின் ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வார்த்தைப் பரிமாற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், லாஃப் எரிவாயு பற்றாக்குறை இருக்கும் போது விலையை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கி இருந்தது. எனினும் சந்தையில் லாஃப் கேஸ் பற்றாக்குறை இன்னும் நிலவுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...