தேர்தல்கள் தொடர்பில் அரசின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது – எம்.ஏ சுமந்திரன்!

Date:

நாட்டில் தேர்தல்கள் பிற்போடப்படுவதானது ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகார காலம் அடுத்த வருடம் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கான தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், பல வருடங்களாக நடத்தப்படாதுள்ள மாகாண சபைத் தேர்தல் அதற்கு முன்னதாக நடத்தப்பட வேண்டும்.அரசாங்கத்தினால் தேர்தல்கள் பிற்போடப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...