பந்துலவிடம் சிஜடி 4 மணிநேர வாக்குமூலம்!

Date:

சதோச நிறுவனத்தில், இரண்டு வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் வேறு தரப்பினருக்கு விற்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 4 மணிநேர வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளரினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பிலும் வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் வேறு தரப்பினருக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் அமைச்சர் பந்துலகுணவர்தன, காவல்துறைமா அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.வர்த்தக அமைச்சு இந்த விடயத்தை குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர், ஊடகங்களுக்கு வெளியிட்ட தகவல்கள் மற்றும் தரவுகள் உள்ளிட்ட முழுமையான ஆதாரங்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குவதற்கு அமைச்சர் பந்துலகுணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...