சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கப்படுமா? – தீர்மானம் இன்று!

Date:

பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

இது தொடர்பிலான யோசனை நுகர்வோர் அதிகார சபையினால் அண்மையில் கூடிய வாழ்க்கை செலவுக் குழுவிடம் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவாலும் சீமெந்து ஒரு மூடையின் விலையை 50 ரூபாவாலும் அதிகரிக்க வாழ்க்கை செலவுக் குழு யோசனை முன்வைத்துள்ளது.

அத்துடன், சமையல் எரிவாயுவின் விலையை 550 ரூபாவால் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...