சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கப்படுமா? – தீர்மானம் இன்று!

Date:

பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

இது தொடர்பிலான யோசனை நுகர்வோர் அதிகார சபையினால் அண்மையில் கூடிய வாழ்க்கை செலவுக் குழுவிடம் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவாலும் சீமெந்து ஒரு மூடையின் விலையை 50 ரூபாவாலும் அதிகரிக்க வாழ்க்கை செலவுக் குழு யோசனை முன்வைத்துள்ளது.

அத்துடன், சமையல் எரிவாயுவின் விலையை 550 ரூபாவால் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...