வெள்ளைப்பூடு சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் சிலர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டமைக்கு வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் கவலை!

Date:

வெள்ளைப்பூடு சம்பவம் தொடர்பான பத்திரிகை செய்தி குறித்து ஊடகவியலாளர்கள் சிலர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டமைக்கு வருத்தம் தெரிவிப்பதாக வெகுஜன ஊடக அமைச்சரும் ,அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இதனை அரசாங்கம் என்ற ரீதியில் நிராகரிப்பதாக தெரிவித்த அமைச்சர், இவ்வாறான சம்பவம் இடம்பெறக்கூடாத ஒன்று என்பதை மிக பொறுப்புடன் தெரிவிப்பதாகவும் கூறினார்.இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக செயல்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைப்பதை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு இன்று (28) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன் போது வெள்ளைப்பூடு சம்பவம் தொடர்பாக சில ஊடகவியலாளர்கள் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டதுடன், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஊடகவியலாளர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்படமாட்டார்கள் என்று உறுதி தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரி ஒருவர் ,வெள்ளைப்பூடு சம்பவம் குறித்து தெரிவித்திருந்த கூற்று தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்றை செய்திருந்ததாகவும் வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...