இலங்கையில் சிறுவர்களுக்கான தடுப்பூசித் திட்டம்!

Date:

விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரை மற்றும் மேற்பார்வையின் கீழ் சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டம், வைத்தியசாலைகளிலும் வழங்கப்படுவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் சிறுவர் நோயியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட அனைவரும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களுக்கு அமைய சிறுவர்களுக்கான தடுப்பூசிக்கு பரிந்துரைத்துள்ளனர். தடுப்பூசியினால் ஏற்படக்கூடும் பாதிப்பு நிலை தொடர்பாக உலகிலேயே பதிவாகிய மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நிகழ்வுகளை கருத்திற்கொண்டதன் பின்னர் தடுப்பூசியில் உள்ள பாதுகாப்பான பெறுபேறுகளை அடுத்து தடுப்பூசியை வழங்குவது சிறந்தது என்பதை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

எனவே, உலகின் பல நாடுகளில் சிறுவர்களுக்கு தற்போது தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கையிலும் அந்த வழிகாட்டல்கள் மூலம் அதே முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நோய் நிலை குறிப்பிட்ட ஒருசிலருக்கு மாத்திரமே பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் தடுப்பூசியினால் கிடைக்கின்ற பாதுகாப்பு மற்றும் நன்மைகள் அதை விட அதிகமானவை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இதனால் ஏற்படுகின்ற சிறிய பாதிப்புகளை விட இதனால் கிடைக்கின்ற பாதுகாப்பு மிகவும் பெறுமதி வாய்ந்தது என்பதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் இலங்கையின் விசேட வைத்திய நிபுணர்கள் அனைவரும் பரிந்துரைப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...