அரிசி விலையை குறைப்பதற்கான யோசனையை முன்வைக்க தயக்கம் காட்டுவதற்கு என்ன காரணம் -இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்ஹ கேள்வி!

Date:

எதிர்காலத்தில் அரிசி விலை அதிகரிக்கலாம் எனவும், அவ்வாறு அதிகரித்துச் செல்லும் அரிசி விலையை குறைப்பதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை வகுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

ஊரகஸ்மங்சந்தி-ஹிபன்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரிசி விலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கருத்து வெளியிடும் பலரும், அரிசி விலையை குறைப்பதற்கான யோசனையை முன்வைக்க தயக்கம் காட்டுவதற்கு என்ன காரணம் எனவும் குறிப்பிட்டார். அவ்வாறு யோசனையொன்றை முன்வைப்பார்கள் என்றால் அதனை தான் ஏற்றுகொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், அதிகரித்துச் செல்லும் அரிசியின் விலையை குறைப்பதற்கு எமது அரசு எதிர்காலத்தில் முறையான திட்டமொன்றை அறிமுகப்படுத்துமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...