துனிசியாவில் முதல் பெண் பிரதமராக நஜ்லா போடன் ரோம்தானே தெரிவு!

Date:

துனிசியா நாட்டில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உலக வங்கியில் பணியாற்றிய நஜ்லா போடன் ரோம்தானே துனிசியா நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளதாக அந் நாட்டின் அதிபர் கைஸ் சயீத் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

63 வயதான ரோம்தானே நாட்டின் உயர் கல்வி அமைச்சகத்தில் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பேற்புகளை வகித்துள்ளார்.கடந்த ஜுலை மாதம் அதிபர் கைஸ் சயீத் முந்தைய அரசைக் கலைத்து உத்தரவிட்ட நிலையில் கடந்த வாரம் அரசை அமைப்பது தொடர்பாக நஜ்லாவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.நாட்டில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பதவியேற்க உள்ள நஜ்லா பத்தாவது பிரதமராவார்.நாட்டில் நிலவி வரும் ஊழலை ஒழிப்பதே புதிய அரசின் நோக்கமாக இருக்கும் எனவும் மருத்துவம், போக்குவரத்து, கல்வி, உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் துனிசியா மக்கள் தேவைகள் நிறைவேற்றப்படும் என அதிபர் சயீத் உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூனீசியாவின் தற்போதைய அதிபர் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவதாக அந்நாட்டு அரசியல் செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத் தக்கது.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...