JUST IN:வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்!

Date:

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து இன்று (01) வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன நேற்று (30) தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, நாட்டில் டொலர் கையிருப்பு தொடர்பான நெருக்கடி நிலவிய சூழலில் வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரங்களை கடந்த ஜூன் மாதம் முதல் தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.இதனையடுத்து, சுமார் 3 மாதங்களுக்கு வெள்ளை சீனி இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார்: ஈரான் தூதுவர்!

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான்...

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...