30 வயதுக்கு மேற்பட்ட 95 % மானோருக்கு இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது!

Date:

நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் சுமார் 95 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் போடப்பட்டுள்ளதாக !தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (01) முற்பகல் காணொளி தொழிநுட்பம் ஊடாக இடம்பெற்ற கொவிட் தடுப்பு விசேட குழு கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை  தெரிவித்துள்ளது.

மேலும், 20 முதல் 30 வயதுக்கு இடையப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கும் மற்றும் 12 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட விசேட தேவையுடைய மற்றும் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி வெற்றிகரமாக போடப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பாக விரிவான கணக்கெடுப்பு ஒன்றை நடத்த கொவிட் தடுப்பு குழு தீர்மானித்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...