மகாத்மா காந்தியடிகளின் 153வது பிறந்தநாள்

Date:

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.

சென்னை மெரினாவில், காந்தி சிலையின் கீழே திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. விடுதலைப் போராட்ட காலத்தில் கதர் ஆடை அணிய வலியுறுத்தி காந்தியடிகள் தறி நெய்ததன் அடையாளமாக தறியால் நெய்யப்பட்ட கதர் நூல் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை சர்வோதயா சங்கம் சார்பில் காந்தியடிகள் குறித்து பாடப்பட்ட பாடல்களை, ஆளுநரும் முதலமைச்சரும் கேட்டு மகிழ்ந்தனர். பாடல்கள் பாடிய மூதாட்டி சுப்புலட்சுமி, 1961ஆம் ஆண்டு முதல் காந்தி ஜெயந்தியன்று பாடல் இசைத்து வருவதாக கூறிய நிலையில் அவருக்கு முதலமைச்சரும், ஆளுநரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Popular

More like this
Related

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...